Thursday, September 30, 2010

எந்திரன்... என் முதல் பார்வையில்..

எந்த வித ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆரம்பிக்கும் இந்த படத்தின் அறிமுக காட்சி.. கண்டிப்பாய் ரஜினி ரசிகர்களுக்கானதில்லை.. படத்தின் பெயர் ஆரம்பிக்கும்போதே ரோபோவின் உருவாக்கம் என்று படம் பயணிக்கும் திசையே வேறு... இத்தனை ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் திரையரங்கு வாசலில் சூடன் கொளுத்தி, பூசணிக்காய் உடைத்து, பாலபிசேகம் பண்ணிவிட்டு, ஆர்ப்பாட்டத்தோடு, பரபரப்பான ஆர்ப்பரிப்போடு திரையரங்கினுள் நுழையும் ரசிகர்களுக்கு முதன் முறையாக அவர்களின் எதிர்பார்ப்பையும் மீறி..ஒரு இயக்குனரின் கனவை நிறைவேற்றுவதற்க்காக எந்த வித நிர்பந்தமும் இன்றி ரஜினி.. வேறு பாதையில்.. மூன்று முகங்களில்.. விஞ்ஞானி, சிட்டி ரோபோ..வில்லன் ரோபோ..

ஆரம்பம்தான் அப்படி... போக போக சிட்டி ரோபோவின் களேபரங்களில் திரையரங்கில் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்து வரும் கரவொலிகள அடங்க வெகு நேரம் பிடிக்கிறது..இந்த படம் முழுவதும் வியாபித்திருக்கும்.. காட்சி.. காட்சி அமைப்பு.. கதாப்பாத்திரம்.. அத்தனையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாய் முற்றிலும் புதியது...

என்னவோ தெரியல.. ஒரு குழந்தையை போல்.. சொன்ன வேலையை செய்து கொண்டு.. சுத்தமாய் பொய் சொல்லியே பழகாத..எதார்த்தமாய் பதில் சொல்லும் சிட்டி ரஜினி மனதில் அப்படியே பதிந்து போகிறார்.. இன்னும் சில நேரம் இந்த சிட்டி ரோபோவுக்கான காட்சிகள் நீண்டிருக்க கூடாதா என்று ஏங்காத மனங்கள் ஒரு சில மட்டுமே இருக்கக்கூடும்

தன் படைப்பான சிட்டி ரோபோ பதில் சொல்லும் அழகை பார்த்து மெய்சிலிர்ப்பது.. அது செய்யும் அசகாய சாகசங்களை மிகுந்த உற்சாகத்தோடு மீடியா முன் பகிர்ந்து கொள்ளும்போது..இதே சிட்டியின் தவறை கண்டு சீறும்போது, இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.. விஞ்ஞானி ரஜினி அவ்வளவு நேர்த்தி..

என்னை பொறுத்த மட்டில் இந்த எந்திரன் இயக்குனர் ஷங்கரின் புது முயற்சி..

எனக்குள் இருக்கும் சினிமா ரசிகனுக்கு இந்த புதிய மனிதனின் வரவு ஒரு பொக்கிஷம்..

புதிய மனிதா ..

MY HEARTY WELCOME TO YOU..

Tuesday, September 14, 2010

அண்ணன் ராமராஜனும் கிடுகிடுத்த பாராளுமன்றமும்

முதன் முறையாக திருசெந்தூர் தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற எங்க ஆருயிர் அண்ணன் ராமராஜன் அவர்களை பற்றிய ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு..ஒவ்வொரு முறை அண்ணன் பாராளுமன்றம் செல்லும்போதெல்லாம் யாரையும் எந்த குறைகளும் சொல்லாமல்.. நாட்டு நடப்பு பற்றி பேசாமல் ( தெரிஞ்சாதானே பேசுவதற்கு )அமைதியாகத்தான் போய் வந்தார்..சிக்கனமா இருக்கும்போது சில்லறை கொட்டினாலே மனசு தாங்காது சிறுத்தை வந்து கொட்டினா... இவரது பேச்சு சிக்கனத்தை சீண்டும் விதமாக இவரை பற்றி சிறிது சிறிதாக எதிர்கட்சி எகத்தாளம் செய்ய ஆரம்பித்தன.. கோபத்தில் கண் சிவக்க ஆரம்பித்தாலும்.. ஆடு மாடுகளிடமே உடல் பலத்தை காட்டாமல் பாட்டு திறனால் அடி பணிய வைத்தவர்.. கேவலம் இந்த ஆறறிவு ஜீவனையா அடித்து பந்தாடப்போகிறார்?.. மெதுவாக சிந்தித்தார்.. இந்த முறை விடக்கூடாது என்று மட்டும் அடி மனதில் கர்ஜித்துக்கொண்டார்..

அடுத்த பாராளுமன்ற கூட்டம்.. சாதாரண எடுப்புக்கே துடுப்பு இருக்கும் இக்காலத்தில் இவருக்கு மட்டும் ஒரு துடுப்பு இல்லாமலா போகும்..இவருக்கு மிக அருகில் இவரை உசுப்பேற்றும் விதமாக அந்த துடுப்பு உட்கார்ந்து கொண்டிருந்தது..கூட்டத்தில் இவரை எக்காளம் செய்த எதிரிகட்சிக்காரர்..( அப்பொழுது அண்ணனின் எதிர்கட்சிதான் தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தது).. தமிழ்நாட்டில் syllabus மாற்றியமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.. உடனே அண்ணனுக்கு அருகில் இருந்த துடுப்பு இதுதான் சமயம் என்று அண்ணனில் இடுப்பில் மத்தளம் வாசிக்க வேகமாய் துடித்தெழுந்த அண்ணன் கூறினார்.. நான் இதை ஆட்சேபிக்கிறேன்..எதிர்க்கட்சிக்காரர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்.. தமிழ்நாட்டில் சில பஸ்ஸில் மட்டும் அல்ல பல பஸ்ஸில் பிரச்சினை உள்ளது என்பதனை ஆணித்தரமாகா கூறிக்கொள்கிறேன் என்றமர்ந்தபோது .. இவருக்கு பக்கத்தில் இருந்த துடுப்பை அடுப்புக்கு அருகில் வைத்தாற்போல் அப்படி வியர்த்திருந்தார்.. ( இந்த அளவுக்கா .........ம ஒருத்தன் இருப்பான்? )..அண்ணன் கம்பீரமாகத்தான் இருந்தார்..துடுப்புக்குதான் இன்றுவரை வியர்த்துக்கொட்டுவது நிற்கவில்லை..