Thursday, March 4, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா- எனது பார்வையில்..

விண்ணைத்தாண்டி வருவாயா...தலைப்பை பார்த்து..
காதலை தெளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் ..பாட்டிலோடு கவிழ்த்திருக்கிறார்கள்....

எனக்கு சுத்தமாய் பிடிக்காத ஹீரோ.. ஒரு முறை கூட ரசிக்காத நடிகை .. ஓரளவு பிடித்த இயக்குனர்.. இவர்கள் மூவரையுமே.. பின்னுக்கு தள்ளியது..

முழுமையான வலியை உள்ளடக்கி எதார்த்தமாய் விண்ணைதாண்டும் ஒரு சத்தியமான காதல் கதை..

ஒரு காதலனின்..காதலியின்.. மனதை..உணர்வை..அவர்கள் பேசும் வசனங்களின் மூலம்..முழு நேர்மையுடன் சொல்லியமைக்கு.. இயக்குனருக்கு போடலாம் ஒரு சலாம்...

எத்தனையோ காதல் கதை.. தமிழ் சினிமா காட்டியிருக்கிறது..அதில் நமக்கு பிடித்த படங்கள் ஏராளம்.. இந்த படத்தை உயர்த்த அதை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை...

இந்த படத்தின் காதலில் சினிமாத்தனம் ௦ஜீரோ சதவிகிதம்..

முதல் காதலை சுவாசிப்பவர்கள் இந்த படம் மூலம் மற்றுமோர் முறை..இறந்த காலத்தின் ஒவ்வோர் மணித்துளிகளையும்..உணரலாம்..


BETTER WATCH IT



..யாரோ..

" பைப்பை திற.. தண்ணி வரட்டும் " - துண்டு சித்தர்..

நல்ல உயரம்.. வெள்ளை நிறம்.. ஊருக்கு மட்டும் உபதேசம்.. ஒரு வேலை சாப்பாடு.. வாரம் தவறாமல் கோவிலுக்கு போவதுண்டு.. கார்த்திகை அமாவாசை.. மற்றும் எந்த விரத நாட்களையும் விடுவதில்லை.. மாமிசம் சாப்பிடுவதற்கென்று சில நாட்கள்.. மொத்தத்தில்..விரத வாழ்க்கையில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.. இத்தனைக்கும் நடுவில் அலுவலகம் சென்று.. கணக்கு உத்தியோகம் பார்க்கிறார்.. மிக சாதாரணமாக இருந்த இவர் " துண்டு சித்தர் " என்று அழைக்க பட்டது மிக சமீப காலங்களாகத்தான்..

என்னதான் நல்ல உயரமா இருந்தாலும்..நல்ல சம்பாத்தியம் இருந்தாலும்.. அறைக்குள் இருக்கும்போது.. இவர் உடை என்னவோ 1 ஜான் துண்டுதான்.. சித்தர போன்ற வாழ்க்கை வாழும் இவருடைய உடை வெறும் துண்டாக இருந்ததால்.. துண்டை சித்தரோடு இணைத்து ..துண்டு சித்தர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்..

இவர் கூறும் வாழ்க்கை தத்துவம் ஏராளம்.. இவர் நேரம் போகாமல் கிறுக்கிய " பைப்பை திற.. தண்ணி வரட்டும் " நாவல்.. இன்னும் ஓரிரு மாதங்களில் குமுதம் போன்ற உயரிய வார இதழ்களில் பிரசுரமாகும்.. வாசகர்கள் விரும்பி வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-- யாரோ --