Thursday, March 11, 2010

மழை நேர மாலை பொழுது

மெலிதாய் சாரல்
குடைக்குள்
இருந்தும்
ஈரமாகும் மேனி..
முழுதாய் நனையலாம்
வேண்டாம் இன்னொரு
குடை....

நிசப்த இருளில்
நிழலாய் நீ
எதிரில் நான்...

அடை மழை
நிழற்குடையில்
நீ
மட்டும்
தனியாய்..

தொலைதூரமாய்
ஒரு இரவுப்பயணம்
ஓட்டுனராய் நான்..
சமமாய் நீ
உனக்கான
முன்னிருக்கையில்
உறங்கா விழியுடன்..

ரசனையாய் ஒரு கவிதை
இல்லை இல்லை

என் ரசனையே
கவிதையாய்..

தொடரும்
இல்லை
முற்றுப்பெறும்
பின்னூட்டத்தை பொறுத்து……