Tuesday, March 9, 2010

முதல் பாவம்..

அம்பாசமுத்திரம்..

எனக்கு அப்போ 11 வயசு இருக்கும்.. ஸ்கூல் முடிச்சி நேரா எங்க அப்பாவோட கடைக்குதான் போவேன்.. வேற எதுக்கு..சாக்லேட், பிஸ்கட் சாப்ட்றதுக்குதான்.. 11 வயசுல நான் என்ன கடைய நிர்வாகமா பண்ண முடியும் .. எங்க அண்ணனும் அப்போ கடையில ப்ரெசென்ட்.. கொஞ்ச நேரம் கழிச்சி நைசா என்கிட்டே சொன்னான்.. சத்தம் போடாம கிளம்பு.. நாம ஒரு முக்கியமான ஒருத்தர பார்க்க போறோம்..சின்ன வயசு..எத எடுத்தாலும் ஆர்வம்.. யோசிக்காம கிளம்பினேன்..நடந் போயிட்டே இருக்கும்போது சொன்னான்.. இன்னிக்கு வீட்டுக்கு நைட் லேட் ஆதான் போக முடியும்நு இன்னொரு பீடிகை போட்டான்.. எனக்கு ஒன்னும் புரியல..ஏதோ ஒரு நினைப்புல.. அவன்கூட நடந்திட்டு இருந்தேன்..

கொஞ்ச நேரம் கழிச்சி பார்த்தா.. ஒரு நூறு பேருக்கு மேல ஒரு மேடை பக்கம் கூட்டமா நிக்குறாங்க.. ஏதோ கட்சி மீட்டிங்.. எங்க அண்ணன் அதுக்கு மேல நடக்கல..அங்கேயே நின்னுட்டு இருந்தான்.. என்னடா இவன் முக்கியமான ஆள்னு சொல்லிட்டு.. இங்க வந்து நிக்கிறான்.. ஒரு வேலை அப்பா அந்த பக்கமா வந்து பயந்து நிக்குரான்னு நினைச்சி சுத்தி பார்த்தா யாரும் இல்ல..

ஒன்னு முக்கியமான ஆள காட்டு.. இல்லைனா வீட்டுக்கு கிளம்புறேன்.. அதே நேரம் மேடையில் இருந்து அறிவிப்பு..

பிரபல தமிழ் நடிகர் ராமராஜன் அவர்கள் இன்னும் 20 தே நிமிடத்தில் உங்கள் முன் தோன்றுவார்னு.. எனக்கு புரிஞ்சிரிச்சி.. அந்த நேரம் ராமராஜன் கிட்ட தட்ட அறிவிக்கப்படாத சூப்பர் ஸ்டாரா தமிழ் சினிமாவுல வலம் வந்த நேரம்.. எனக்கும் சந்தோஷம்.. அவங்க சொல்லி ஒரு 45 நிமிஷம் கழிச்சி. மேடையில் ராமராஜன்..

பார்த்திட்டேன்.. பார்த்திட்டேன்..

இவர்தாங்க நான் நேரில் பார்த்த முதல் சினிமா கதாநாயகன்.. எவ்வளவோ வளர்பிறை நடிகர் தமிழ் ல இன்னும் நடிச்சிட்டு இருக்க..நான் ஏன் இவர முதல் முதலா நேர்ல பார்க்கணும்..

தலைப்ப மறுபடி படிங்க..

என் வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கும்போதே திடீர்னு சறுக்கல் ஏற்பட்டா எனக்கு இந்த நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வரும்..