விண்ணைத்தாண்டி வருவாயா...தலைப்பை பார்த்து..
காதலை தெளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் ..பாட்டிலோடு கவிழ்த்திருக்கிறார்கள்....
எனக்கு சுத்தமாய் பிடிக்காத ஹீரோ.. ஒரு முறை கூட ரசிக்காத நடிகை .. ஓரளவு பிடித்த இயக்குனர்.. இவர்கள் மூவரையுமே.. பின்னுக்கு தள்ளியது..
முழுமையான வலியை உள்ளடக்கி எதார்த்தமாய் விண்ணைதாண்டும் ஒரு சத்தியமான காதல் கதை..
ஒரு காதலனின்..காதலியின்.. மனதை..உணர்வை..அவர்கள் பேசும் வசனங்களின் மூலம்..முழு நேர்மையுடன் சொல்லியமைக்கு.. இயக்குனருக்கு போடலாம் ஒரு சலாம்...
எத்தனையோ காதல் கதை.. தமிழ் சினிமா காட்டியிருக்கிறது..அதில் நமக்கு பிடித்த படங்கள் ஏராளம்.. இந்த படத்தை உயர்த்த அதை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை...
இந்த படத்தின் காதலில் சினிமாத்தனம் ௦ஜீரோ சதவிகிதம்..
முதல் காதலை சுவாசிப்பவர்கள் இந்த படம் மூலம் மற்றுமோர் முறை..இறந்த காலத்தின் ஒவ்வோர் மணித்துளிகளையும்..உணரலாம்..
BETTER WATCH IT
..யாரோ..
Thursday, March 4, 2010
" பைப்பை திற.. தண்ணி வரட்டும் " - துண்டு சித்தர்..
நல்ல உயரம்.. வெள்ளை நிறம்.. ஊருக்கு மட்டும் உபதேசம்.. ஒரு வேலை சாப்பாடு.. வாரம் தவறாமல் கோவிலுக்கு போவதுண்டு.. கார்த்திகை அமாவாசை.. மற்றும் எந்த விரத நாட்களையும் விடுவதில்லை.. மாமிசம் சாப்பிடுவதற்கென்று சில நாட்கள்.. மொத்தத்தில்..விரத வாழ்க்கையில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.. இத்தனைக்கும் நடுவில் அலுவலகம் சென்று.. கணக்கு உத்தியோகம் பார்க்கிறார்.. மிக சாதாரணமாக இருந்த இவர் " துண்டு சித்தர் " என்று அழைக்க பட்டது மிக சமீப காலங்களாகத்தான்..
என்னதான் நல்ல உயரமா இருந்தாலும்..நல்ல சம்பாத்தியம் இருந்தாலும்.. அறைக்குள் இருக்கும்போது.. இவர் உடை என்னவோ 1 ஜான் துண்டுதான்.. சித்தர போன்ற வாழ்க்கை வாழும் இவருடைய உடை வெறும் துண்டாக இருந்ததால்.. துண்டை சித்தரோடு இணைத்து ..துண்டு சித்தர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்..
இவர் கூறும் வாழ்க்கை தத்துவம் ஏராளம்.. இவர் நேரம் போகாமல் கிறுக்கிய " பைப்பை திற.. தண்ணி வரட்டும் " நாவல்.. இன்னும் ஓரிரு மாதங்களில் குமுதம் போன்ற உயரிய வார இதழ்களில் பிரசுரமாகும்.. வாசகர்கள் விரும்பி வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-- யாரோ --
என்னதான் நல்ல உயரமா இருந்தாலும்..நல்ல சம்பாத்தியம் இருந்தாலும்.. அறைக்குள் இருக்கும்போது.. இவர் உடை என்னவோ 1 ஜான் துண்டுதான்.. சித்தர போன்ற வாழ்க்கை வாழும் இவருடைய உடை வெறும் துண்டாக இருந்ததால்.. துண்டை சித்தரோடு இணைத்து ..துண்டு சித்தர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்..
இவர் கூறும் வாழ்க்கை தத்துவம் ஏராளம்.. இவர் நேரம் போகாமல் கிறுக்கிய " பைப்பை திற.. தண்ணி வரட்டும் " நாவல்.. இன்னும் ஓரிரு மாதங்களில் குமுதம் போன்ற உயரிய வார இதழ்களில் பிரசுரமாகும்.. வாசகர்கள் விரும்பி வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-- யாரோ --
Tuesday, February 23, 2010
ஊமை தேவதை

ஊமை தேவதை
நீ
மனிதர்களுக்கு மத்தியில்
மனிதத்தை உணர்த்தி விட்டு போன
ஊமை தேவதை
அன்பே கிறிஸ்தவம்
எனவாழ்ந்து காட்டிய
பைபிள்
தொட வெறுக்கும் சமூகத்தையும்
தொட்டு தூக்கிய
உண்மை மருத்துவர்
ஒதுக்கப்பட்ட நோயாளிகளின்
ஒரே அன்னை
இன்றும் எனக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒரு நிஜக்கவிதை
பிறந்த தினமே
கொண்டாடப்படவேண்டிய
அன்னையர் தினம்
மனிதம் தழைக்க...
அன்பெனும் மந்திரம் ஓயாமல் ஒழிக்க..
மற்றுமோர் பிறவி எடு...
Sunday, February 21, 2010
பதிவர் உலகின் குறுகிய கால ஜாம்பவான்
பதிவர் உலகின் குறுகிய கால ஜாம்பவான்.. எழுத்துலகின் ஒரே விடிவெள்ளி.. இடுகைகளின் நிரந்தர முதல்வர்.. எறும்பு ( http://yerumbu.blogspot.com/ )அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்.. என் பதிவுலக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறேன்..
" ஓடுற பஸ்ஸ நிறுத்தி கல்லால் அடிக்கும் கலாசாரம் கொண்ட தமிழர்கள் மத்தியில்.."
நின்று போன என் பதிவுகளை தொடர வைத்த சூத்ரதாரி நண்பர் எறும்பு மட்டுமே..பதிவர் உலகத்தில் ஜெயிக்க.. அவர் கற்றுக்கொடுத்த வித்தைகள் கொஞ்ச நஞ்சமில்லை..
அது ராணுவ ரகசியத்தை விட மிக முக்கியமான ரா ( RAW ) ரகசியம் என்பதால்.. அதை வெளிப்படுத்த விரும்பவில்லை..
என்றென்றும் நன்றியுடன்..
பஹ்ரைன்பாபா..
" ஓடுற பஸ்ஸ நிறுத்தி கல்லால் அடிக்கும் கலாசாரம் கொண்ட தமிழர்கள் மத்தியில்.."
நின்று போன என் பதிவுகளை தொடர வைத்த சூத்ரதாரி நண்பர் எறும்பு மட்டுமே..பதிவர் உலகத்தில் ஜெயிக்க.. அவர் கற்றுக்கொடுத்த வித்தைகள் கொஞ்ச நஞ்சமில்லை..
அது ராணுவ ரகசியத்தை விட மிக முக்கியமான ரா ( RAW ) ரகசியம் என்பதால்.. அதை வெளிப்படுத்த விரும்பவில்லை..
என்றென்றும் நன்றியுடன்..
பஹ்ரைன்பாபா..
Sunday, January 24, 2010
VEER - REVIEW
மூன்று முட்டாள்கள்-அ பார்க்க நாலு பேர் போனோம்.. அதனால்தானோ என்னமோ டிக்கெட் கிடைக்கல.. வேற வலி இல்லாம.. நேத்து ரிலீஸ் ஆன.. ஆனால் பார்க்க ஆள் இல்லாத " வீர் " படத்துக்கு போனோம்..
கதை தெரியாம படம் பார்த்தாதான் ஒரு த்ரில் என்ற என் எண்ணத்துல கிலோ கணக்குல புல்டோசெர் அ விட்டு ஏத்திட்டாங்க..கொஞ்ச நாளா என் டைம் சரி இல்லைன்னு நினைக்கிறேன்.. இல்லைனா இந்த படத்த தியேட்டர் - ல பார்ப்பேனா..
சல்மான் என்ற உடனே நினைவுக்கு வருவது..ஆங்.. கண்டுபிடிசிருப்பீங்க.. இருந்தாலும் சொல்றேன்..சின்ன வயசு ல மேல் சட்டை இல்லாம கஷ்டப்பட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்.. அந்த பாதிப்பு இந்த படம் வரை இருக்கு..படம் முழுவதிலும் இருக்கு..
ஹீரோயின் காத்ரீனா கைப் நு தான் இன்னிக்கு காலை வரை நினைச்சிட்டு இருந்தேன்..இன்னிக்குதான் தெரியும் காத்ரீனா கைப் மாதிரியே ஆச்சு அசலாக இருக்கும் இன்னொரு பெண் என்று.. ..
நல்ல வேலை இந்த பொண்ணு காத்ரீனா கைப் மாதிரி பிறந்திசசி.. இதுக்கு பதிலா பிரபாகரன் மாதிரி பிறந்திச்சின்னா... இந்நேரம் நம்ம ஆளுங்க இத பார்சல் பண்ணி ஸ்ரீலங்கா அனுப்பி இருப்பாங்க.. முட்டாள் சிங்கள அரசும்... இவரையும் கொன்னு.. இந்த உடம்ப உலகத்துக்கு காமிச்சி.. ரெண்டு பிரபாகரன கொன்னுட்டோம்னு மார் தட்டி இருப்பாங்க..
சல்மான் கானிடம் ஒரு கேள்வி.. ஐஸ்வர்யா ராய் மாதிரியே ஒரு பொண்ண கண்டுபிடிச்சீங்க.. இப்போ காத்ரீனா கைப் மாதிரி.. இந்த நேரத்த நல்ல கதைய கண்டுபிடிக்க செலவு பண்ணலாமே...
என்னடா இதுவரை படத்தோட கதைய பத்தி விமர்சனம் பண்ணலன்னு கேக்குறீங்களா..என்ன நக்கலா... அந்த கதைன்ற கருமம் இருக்கா இல்லையான்னு நான் யோசிக்கிறதுக்குள்ள..படத்த முடிச்சிட்டான்கன்ற கொலை வெறி இல இருக்கேன்.. நீங்க வேற..
கதை தெரியாம படம் பார்த்தாதான் ஒரு த்ரில் என்ற என் எண்ணத்துல கிலோ கணக்குல புல்டோசெர் அ விட்டு ஏத்திட்டாங்க..கொஞ்ச நாளா என் டைம் சரி இல்லைன்னு நினைக்கிறேன்.. இல்லைனா இந்த படத்த தியேட்டர் - ல பார்ப்பேனா..
சல்மான் என்ற உடனே நினைவுக்கு வருவது..ஆங்.. கண்டுபிடிசிருப்பீங்க.. இருந்தாலும் சொல்றேன்..சின்ன வயசு ல மேல் சட்டை இல்லாம கஷ்டப்பட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்.. அந்த பாதிப்பு இந்த படம் வரை இருக்கு..படம் முழுவதிலும் இருக்கு..
ஹீரோயின் காத்ரீனா கைப் நு தான் இன்னிக்கு காலை வரை நினைச்சிட்டு இருந்தேன்..இன்னிக்குதான் தெரியும் காத்ரீனா கைப் மாதிரியே ஆச்சு அசலாக இருக்கும் இன்னொரு பெண் என்று.. ..
நல்ல வேலை இந்த பொண்ணு காத்ரீனா கைப் மாதிரி பிறந்திசசி.. இதுக்கு பதிலா பிரபாகரன் மாதிரி பிறந்திச்சின்னா... இந்நேரம் நம்ம ஆளுங்க இத பார்சல் பண்ணி ஸ்ரீலங்கா அனுப்பி இருப்பாங்க.. முட்டாள் சிங்கள அரசும்... இவரையும் கொன்னு.. இந்த உடம்ப உலகத்துக்கு காமிச்சி.. ரெண்டு பிரபாகரன கொன்னுட்டோம்னு மார் தட்டி இருப்பாங்க..
சல்மான் கானிடம் ஒரு கேள்வி.. ஐஸ்வர்யா ராய் மாதிரியே ஒரு பொண்ண கண்டுபிடிச்சீங்க.. இப்போ காத்ரீனா கைப் மாதிரி.. இந்த நேரத்த நல்ல கதைய கண்டுபிடிக்க செலவு பண்ணலாமே...
என்னடா இதுவரை படத்தோட கதைய பத்தி விமர்சனம் பண்ணலன்னு கேக்குறீங்களா..என்ன நக்கலா... அந்த கதைன்ற கருமம் இருக்கா இல்லையான்னு நான் யோசிக்கிறதுக்குள்ள..படத்த முடிச்சிட்டான்கன்ற கொலை வெறி இல இருக்கேன்.. நீங்க வேற..
Monday, January 18, 2010
ஆயிரத்தில ஒருவன் - சின்னத்திரை விமர்சனம்..
ஆயிரத்தில ஒருவன் பார்த்தேன்.. எங்க எப்டி நு மட்டும் கேட்காதீங்க..செல்வராகவன் படம் மேல எனக்கு பெருசா அப்டி ஒண்ணும் எதிர்பார்ப்பு கிடையாது.. எல்லாரும் ரொம்ப எதிர்பார்ப்பா இருக்காங்களேன்னு.. எனக்குள்ளேயும் படம் பார்க்கனும்னு ஆசை வந்து பார்த்தது..டைட்டானிக் பட ஸ்டைல் ல ஆரம்பிச்சி.. ஒவ்வொரு காட்சியமைப்பும் தமிழுக்கு ரொம்ப புதுசாவே பட்டுச்சி.. ச்சே. கிளப்பலா கொண்டு போயிருக்காம்பா நு நினைச்சி முடியல.. அந்த இண்டர்வல் சீன்.. ரீமா.. கார்த்தி.. ஆண்ட்ரியா.. மூணு பேருமே ஏதோ டி ராகுலா கடிச்ச மாதிரி அங்குட்டும் இங்குட்டும் ஓடுறாங்க.. சுடுறாங்க.. மொத்தத்துல வெறிக்கடிய ரொம்ப வே என்ஜாய் பண்றாங்க.. இந்த இடத்துல செல்வராகவன் எண்ட மட்டும் ஏதோ சொல்ல வர்ற மாதிரி ஒரு பீலிங்.. இது வரை இந்த படத்த பத்தி தாறு மாறா விமர்சனம் பண்ணிவங்க மேல கோபம் வந்தது.. இப்போ அந்த கோபம் அப்டியே என் நினைப்பு மேல... அதுக்கப்புறம் அந்த சோழ அரசர்களோட தற்போதய வாழ்க்கை, அவங்க பேச்சு வழக்குகள்.. ரீமா வோட வெறி.. அப்டி இப்டி நு கொஞ்ச நேரம் எனக்கு புரியாத பாஷையில பேசிட்டு இருந்ததால.. கொஞ்ச நேரம் இந்திய பங்களாதேஷ் கு இடையிலான டெஸ்ட் மேட்ச் எ ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்.. மறுபடி அந்த அடிமைகளை ரவுண்டு கட்டி கொல்ற சீன்... லேசா குலை நடுங்குற மாதிரிதான்...அந்த நல்ல சீன் ல எதுக்கு இந்த கோமாளி பிரதாப் பொத்தான் எ உள்ள விட்டாங்களோ.. முதல்ல அவன் மண்டையில அந்த இரும்பு குண்ட வீசுன்னு நான் மனசார சொல்ற அளவுக்கு அவர் நடிப்பு ப்ராமதம்.. எனக்கு இந்த சோழ அரசர் மேல பரிதாபமோ.. இல்ல இந்த பாண்டிய வம்சத்து மேல வெறுப்போ அந்த கடைசி கட்ட போர் நடக்க ஆரம்பிச்சும் வரல.. அந்த போர் முடிஞ்சி பாண்டிய வம்சம் ஜெயிச்ச பின்னாடி.. ஏதோ ஒரு விஷயம் நெருட ஆரம்பிச்சிது.. சிறை பிடிக்கப்பட்ட பெண்கள்ட அந்த அதிரடிப்படையினர் காம வேட்டயாடுற காட்சி... இதே மாதிரி தானே நம் தமிழ் சகோதரிகளுக்கும் இலங்கையில நடந்திருககும்னு தோணிச்சி...மனசு ரொம்ப வலிச்சுது.. போர் கைதிகள நடத்துறதுல ஒரு அடிப்படை தர்மம் கூட.. அதுவும் இந்த காலத்தில் இல்லாம போயிருக்கின்ற வருத்தம் வந்தது..படம் முடியப்போற டைம் ல என்னை மறுபடியும் கதைக்குள்ள செல்வராகவன் இழுத்தது மறுக்க முடியாத உண்மை.. படத்தோட ஆரம்பத்தில சோழ இளவரசர் படை பரிவாரங்களோட தப்பிக்கிறார்.. முடிவுல ஒரு தனி மனிதன்.. தற்போதய இளவரசியோடு தப்பிக்கிறார்.. இவர்தான் அந்த ஆயிரம் சோழர் மக்களில் ஒருவன்..
கடைசியா.. செல்வராகவன் எ பத்தி நினைக்கும்போது.. ஒரு லைன் தான் ஞாபகத்துக்கு வருது... " இவனுககுல்ளையும் ஏதோ ஒன்னு இருந்திருக்கு பாரேன் "
என்னோட முதல் பதிவு.. சோ பாத்து பவுசா.. விமர்சனம் பண்ண கேட்டுக்கொள்கிறேன்..
கடைசியா.. செல்வராகவன் எ பத்தி நினைக்கும்போது.. ஒரு லைன் தான் ஞாபகத்துக்கு வருது... " இவனுககுல்ளையும் ஏதோ ஒன்னு இருந்திருக்கு பாரேன் "
என்னோட முதல் பதிவு.. சோ பாத்து பவுசா.. விமர்சனம் பண்ண கேட்டுக்கொள்கிறேன்..
Subscribe to:
Posts (Atom)