மெலிதாய் சாரல்
குடைக்குள்
இருந்தும்
ஈரமாகும் மேனி..
முழுதாய் நனையலாம்
வேண்டாம் இன்னொரு
குடை....
நிசப்த இருளில்
நிழலாய் நீ
எதிரில் நான்...
அடை மழை
நிழற்குடையில்
நீ
மட்டும்
தனியாய்..
தொலைதூரமாய்
ஒரு இரவுப்பயணம்
ஓட்டுனராய் நான்..
சமமாய் நீ
உனக்கான
முன்னிருக்கையில்
உறங்கா விழியுடன்..
ரசனையாய் ஒரு கவிதை
இல்லை இல்லை
என் ரசனையே
கவிதையாய்..
தொடரும்
இல்லை
முற்றுப்பெறும்
பின்னூட்டத்தை பொறுத்து……
Thursday, March 11, 2010
Tuesday, March 9, 2010
முதல் பாவம்..
அம்பாசமுத்திரம்..
எனக்கு அப்போ 11 வயசு இருக்கும்.. ஸ்கூல் முடிச்சி நேரா எங்க அப்பாவோட கடைக்குதான் போவேன்.. வேற எதுக்கு..சாக்லேட், பிஸ்கட் சாப்ட்றதுக்குதான்.. 11 வயசுல நான் என்ன கடைய நிர்வாகமா பண்ண முடியும் .. எங்க அண்ணனும் அப்போ கடையில ப்ரெசென்ட்.. கொஞ்ச நேரம் கழிச்சி நைசா என்கிட்டே சொன்னான்.. சத்தம் போடாம கிளம்பு.. நாம ஒரு முக்கியமான ஒருத்தர பார்க்க போறோம்..சின்ன வயசு..எத எடுத்தாலும் ஆர்வம்.. யோசிக்காம கிளம்பினேன்..நடந் போயிட்டே இருக்கும்போது சொன்னான்.. இன்னிக்கு வீட்டுக்கு நைட் லேட் ஆதான் போக முடியும்நு இன்னொரு பீடிகை போட்டான்.. எனக்கு ஒன்னும் புரியல..ஏதோ ஒரு நினைப்புல.. அவன்கூட நடந்திட்டு இருந்தேன்..
கொஞ்ச நேரம் கழிச்சி பார்த்தா.. ஒரு நூறு பேருக்கு மேல ஒரு மேடை பக்கம் கூட்டமா நிக்குறாங்க.. ஏதோ கட்சி மீட்டிங்.. எங்க அண்ணன் அதுக்கு மேல நடக்கல..அங்கேயே நின்னுட்டு இருந்தான்.. என்னடா இவன் முக்கியமான ஆள்னு சொல்லிட்டு.. இங்க வந்து நிக்கிறான்.. ஒரு வேலை அப்பா அந்த பக்கமா வந்து பயந்து நிக்குரான்னு நினைச்சி சுத்தி பார்த்தா யாரும் இல்ல..
ஒன்னு முக்கியமான ஆள காட்டு.. இல்லைனா வீட்டுக்கு கிளம்புறேன்.. அதே நேரம் மேடையில் இருந்து அறிவிப்பு..
பிரபல தமிழ் நடிகர் ராமராஜன் அவர்கள் இன்னும் 20 தே நிமிடத்தில் உங்கள் முன் தோன்றுவார்னு.. எனக்கு புரிஞ்சிரிச்சி.. அந்த நேரம் ராமராஜன் கிட்ட தட்ட அறிவிக்கப்படாத சூப்பர் ஸ்டாரா தமிழ் சினிமாவுல வலம் வந்த நேரம்.. எனக்கும் சந்தோஷம்.. அவங்க சொல்லி ஒரு 45 நிமிஷம் கழிச்சி. மேடையில் ராமராஜன்..
பார்த்திட்டேன்.. பார்த்திட்டேன்..
இவர்தாங்க நான் நேரில் பார்த்த முதல் சினிமா கதாநாயகன்.. எவ்வளவோ வளர்பிறை நடிகர் தமிழ் ல இன்னும் நடிச்சிட்டு இருக்க..நான் ஏன் இவர முதல் முதலா நேர்ல பார்க்கணும்..
தலைப்ப மறுபடி படிங்க..
என் வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கும்போதே திடீர்னு சறுக்கல் ஏற்பட்டா எனக்கு இந்த நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வரும்..
எனக்கு அப்போ 11 வயசு இருக்கும்.. ஸ்கூல் முடிச்சி நேரா எங்க அப்பாவோட கடைக்குதான் போவேன்.. வேற எதுக்கு..சாக்லேட், பிஸ்கட் சாப்ட்றதுக்குதான்.. 11 வயசுல நான் என்ன கடைய நிர்வாகமா பண்ண முடியும் .. எங்க அண்ணனும் அப்போ கடையில ப்ரெசென்ட்.. கொஞ்ச நேரம் கழிச்சி நைசா என்கிட்டே சொன்னான்.. சத்தம் போடாம கிளம்பு.. நாம ஒரு முக்கியமான ஒருத்தர பார்க்க போறோம்..சின்ன வயசு..எத எடுத்தாலும் ஆர்வம்.. யோசிக்காம கிளம்பினேன்..நடந் போயிட்டே இருக்கும்போது சொன்னான்.. இன்னிக்கு வீட்டுக்கு நைட் லேட் ஆதான் போக முடியும்நு இன்னொரு பீடிகை போட்டான்.. எனக்கு ஒன்னும் புரியல..ஏதோ ஒரு நினைப்புல.. அவன்கூட நடந்திட்டு இருந்தேன்..
கொஞ்ச நேரம் கழிச்சி பார்த்தா.. ஒரு நூறு பேருக்கு மேல ஒரு மேடை பக்கம் கூட்டமா நிக்குறாங்க.. ஏதோ கட்சி மீட்டிங்.. எங்க அண்ணன் அதுக்கு மேல நடக்கல..அங்கேயே நின்னுட்டு இருந்தான்.. என்னடா இவன் முக்கியமான ஆள்னு சொல்லிட்டு.. இங்க வந்து நிக்கிறான்.. ஒரு வேலை அப்பா அந்த பக்கமா வந்து பயந்து நிக்குரான்னு நினைச்சி சுத்தி பார்த்தா யாரும் இல்ல..
ஒன்னு முக்கியமான ஆள காட்டு.. இல்லைனா வீட்டுக்கு கிளம்புறேன்.. அதே நேரம் மேடையில் இருந்து அறிவிப்பு..
பிரபல தமிழ் நடிகர் ராமராஜன் அவர்கள் இன்னும் 20 தே நிமிடத்தில் உங்கள் முன் தோன்றுவார்னு.. எனக்கு புரிஞ்சிரிச்சி.. அந்த நேரம் ராமராஜன் கிட்ட தட்ட அறிவிக்கப்படாத சூப்பர் ஸ்டாரா தமிழ் சினிமாவுல வலம் வந்த நேரம்.. எனக்கும் சந்தோஷம்.. அவங்க சொல்லி ஒரு 45 நிமிஷம் கழிச்சி. மேடையில் ராமராஜன்..
பார்த்திட்டேன்.. பார்த்திட்டேன்..
இவர்தாங்க நான் நேரில் பார்த்த முதல் சினிமா கதாநாயகன்.. எவ்வளவோ வளர்பிறை நடிகர் தமிழ் ல இன்னும் நடிச்சிட்டு இருக்க..நான் ஏன் இவர முதல் முதலா நேர்ல பார்க்கணும்..
தலைப்ப மறுபடி படிங்க..
என் வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கும்போதே திடீர்னு சறுக்கல் ஏற்பட்டா எனக்கு இந்த நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வரும்..
Thursday, March 4, 2010
விண்ணைத்தாண்டி வருவாயா- எனது பார்வையில்..
விண்ணைத்தாண்டி வருவாயா...தலைப்பை பார்த்து..
காதலை தெளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் ..பாட்டிலோடு கவிழ்த்திருக்கிறார்கள்....
எனக்கு சுத்தமாய் பிடிக்காத ஹீரோ.. ஒரு முறை கூட ரசிக்காத நடிகை .. ஓரளவு பிடித்த இயக்குனர்.. இவர்கள் மூவரையுமே.. பின்னுக்கு தள்ளியது..
முழுமையான வலியை உள்ளடக்கி எதார்த்தமாய் விண்ணைதாண்டும் ஒரு சத்தியமான காதல் கதை..
ஒரு காதலனின்..காதலியின்.. மனதை..உணர்வை..அவர்கள் பேசும் வசனங்களின் மூலம்..முழு நேர்மையுடன் சொல்லியமைக்கு.. இயக்குனருக்கு போடலாம் ஒரு சலாம்...
எத்தனையோ காதல் கதை.. தமிழ் சினிமா காட்டியிருக்கிறது..அதில் நமக்கு பிடித்த படங்கள் ஏராளம்.. இந்த படத்தை உயர்த்த அதை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை...
இந்த படத்தின் காதலில் சினிமாத்தனம் ௦ஜீரோ சதவிகிதம்..
முதல் காதலை சுவாசிப்பவர்கள் இந்த படம் மூலம் மற்றுமோர் முறை..இறந்த காலத்தின் ஒவ்வோர் மணித்துளிகளையும்..உணரலாம்..
BETTER WATCH IT
..யாரோ..
காதலை தெளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் ..பாட்டிலோடு கவிழ்த்திருக்கிறார்கள்....
எனக்கு சுத்தமாய் பிடிக்காத ஹீரோ.. ஒரு முறை கூட ரசிக்காத நடிகை .. ஓரளவு பிடித்த இயக்குனர்.. இவர்கள் மூவரையுமே.. பின்னுக்கு தள்ளியது..
முழுமையான வலியை உள்ளடக்கி எதார்த்தமாய் விண்ணைதாண்டும் ஒரு சத்தியமான காதல் கதை..
ஒரு காதலனின்..காதலியின்.. மனதை..உணர்வை..அவர்கள் பேசும் வசனங்களின் மூலம்..முழு நேர்மையுடன் சொல்லியமைக்கு.. இயக்குனருக்கு போடலாம் ஒரு சலாம்...
எத்தனையோ காதல் கதை.. தமிழ் சினிமா காட்டியிருக்கிறது..அதில் நமக்கு பிடித்த படங்கள் ஏராளம்.. இந்த படத்தை உயர்த்த அதை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை...
இந்த படத்தின் காதலில் சினிமாத்தனம் ௦ஜீரோ சதவிகிதம்..
முதல் காதலை சுவாசிப்பவர்கள் இந்த படம் மூலம் மற்றுமோர் முறை..இறந்த காலத்தின் ஒவ்வோர் மணித்துளிகளையும்..உணரலாம்..
BETTER WATCH IT
..யாரோ..
" பைப்பை திற.. தண்ணி வரட்டும் " - துண்டு சித்தர்..
நல்ல உயரம்.. வெள்ளை நிறம்.. ஊருக்கு மட்டும் உபதேசம்.. ஒரு வேலை சாப்பாடு.. வாரம் தவறாமல் கோவிலுக்கு போவதுண்டு.. கார்த்திகை அமாவாசை.. மற்றும் எந்த விரத நாட்களையும் விடுவதில்லை.. மாமிசம் சாப்பிடுவதற்கென்று சில நாட்கள்.. மொத்தத்தில்..விரத வாழ்க்கையில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.. இத்தனைக்கும் நடுவில் அலுவலகம் சென்று.. கணக்கு உத்தியோகம் பார்க்கிறார்.. மிக சாதாரணமாக இருந்த இவர் " துண்டு சித்தர் " என்று அழைக்க பட்டது மிக சமீப காலங்களாகத்தான்..
என்னதான் நல்ல உயரமா இருந்தாலும்..நல்ல சம்பாத்தியம் இருந்தாலும்.. அறைக்குள் இருக்கும்போது.. இவர் உடை என்னவோ 1 ஜான் துண்டுதான்.. சித்தர போன்ற வாழ்க்கை வாழும் இவருடைய உடை வெறும் துண்டாக இருந்ததால்.. துண்டை சித்தரோடு இணைத்து ..துண்டு சித்தர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்..
இவர் கூறும் வாழ்க்கை தத்துவம் ஏராளம்.. இவர் நேரம் போகாமல் கிறுக்கிய " பைப்பை திற.. தண்ணி வரட்டும் " நாவல்.. இன்னும் ஓரிரு மாதங்களில் குமுதம் போன்ற உயரிய வார இதழ்களில் பிரசுரமாகும்.. வாசகர்கள் விரும்பி வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-- யாரோ --
என்னதான் நல்ல உயரமா இருந்தாலும்..நல்ல சம்பாத்தியம் இருந்தாலும்.. அறைக்குள் இருக்கும்போது.. இவர் உடை என்னவோ 1 ஜான் துண்டுதான்.. சித்தர போன்ற வாழ்க்கை வாழும் இவருடைய உடை வெறும் துண்டாக இருந்ததால்.. துண்டை சித்தரோடு இணைத்து ..துண்டு சித்தர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்..
இவர் கூறும் வாழ்க்கை தத்துவம் ஏராளம்.. இவர் நேரம் போகாமல் கிறுக்கிய " பைப்பை திற.. தண்ணி வரட்டும் " நாவல்.. இன்னும் ஓரிரு மாதங்களில் குமுதம் போன்ற உயரிய வார இதழ்களில் பிரசுரமாகும்.. வாசகர்கள் விரும்பி வாங்கி படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-- யாரோ --
Tuesday, February 23, 2010
ஊமை தேவதை

ஊமை தேவதை
நீ
மனிதர்களுக்கு மத்தியில்
மனிதத்தை உணர்த்தி விட்டு போன
ஊமை தேவதை
அன்பே கிறிஸ்தவம்
எனவாழ்ந்து காட்டிய
பைபிள்
தொட வெறுக்கும் சமூகத்தையும்
தொட்டு தூக்கிய
உண்மை மருத்துவர்
ஒதுக்கப்பட்ட நோயாளிகளின்
ஒரே அன்னை
இன்றும் எனக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒரு நிஜக்கவிதை
பிறந்த தினமே
கொண்டாடப்படவேண்டிய
அன்னையர் தினம்
மனிதம் தழைக்க...
அன்பெனும் மந்திரம் ஓயாமல் ஒழிக்க..
மற்றுமோர் பிறவி எடு...
Sunday, February 21, 2010
பதிவர் உலகின் குறுகிய கால ஜாம்பவான்
பதிவர் உலகின் குறுகிய கால ஜாம்பவான்.. எழுத்துலகின் ஒரே விடிவெள்ளி.. இடுகைகளின் நிரந்தர முதல்வர்.. எறும்பு ( http://yerumbu.blogspot.com/ )அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்.. என் பதிவுலக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறேன்..
" ஓடுற பஸ்ஸ நிறுத்தி கல்லால் அடிக்கும் கலாசாரம் கொண்ட தமிழர்கள் மத்தியில்.."
நின்று போன என் பதிவுகளை தொடர வைத்த சூத்ரதாரி நண்பர் எறும்பு மட்டுமே..பதிவர் உலகத்தில் ஜெயிக்க.. அவர் கற்றுக்கொடுத்த வித்தைகள் கொஞ்ச நஞ்சமில்லை..
அது ராணுவ ரகசியத்தை விட மிக முக்கியமான ரா ( RAW ) ரகசியம் என்பதால்.. அதை வெளிப்படுத்த விரும்பவில்லை..
என்றென்றும் நன்றியுடன்..
பஹ்ரைன்பாபா..
" ஓடுற பஸ்ஸ நிறுத்தி கல்லால் அடிக்கும் கலாசாரம் கொண்ட தமிழர்கள் மத்தியில்.."
நின்று போன என் பதிவுகளை தொடர வைத்த சூத்ரதாரி நண்பர் எறும்பு மட்டுமே..பதிவர் உலகத்தில் ஜெயிக்க.. அவர் கற்றுக்கொடுத்த வித்தைகள் கொஞ்ச நஞ்சமில்லை..
அது ராணுவ ரகசியத்தை விட மிக முக்கியமான ரா ( RAW ) ரகசியம் என்பதால்.. அதை வெளிப்படுத்த விரும்பவில்லை..
என்றென்றும் நன்றியுடன்..
பஹ்ரைன்பாபா..
Sunday, January 24, 2010
VEER - REVIEW
மூன்று முட்டாள்கள்-அ பார்க்க நாலு பேர் போனோம்.. அதனால்தானோ என்னமோ டிக்கெட் கிடைக்கல.. வேற வலி இல்லாம.. நேத்து ரிலீஸ் ஆன.. ஆனால் பார்க்க ஆள் இல்லாத " வீர் " படத்துக்கு போனோம்..
கதை தெரியாம படம் பார்த்தாதான் ஒரு த்ரில் என்ற என் எண்ணத்துல கிலோ கணக்குல புல்டோசெர் அ விட்டு ஏத்திட்டாங்க..கொஞ்ச நாளா என் டைம் சரி இல்லைன்னு நினைக்கிறேன்.. இல்லைனா இந்த படத்த தியேட்டர் - ல பார்ப்பேனா..
சல்மான் என்ற உடனே நினைவுக்கு வருவது..ஆங்.. கண்டுபிடிசிருப்பீங்க.. இருந்தாலும் சொல்றேன்..சின்ன வயசு ல மேல் சட்டை இல்லாம கஷ்டப்பட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்.. அந்த பாதிப்பு இந்த படம் வரை இருக்கு..படம் முழுவதிலும் இருக்கு..
ஹீரோயின் காத்ரீனா கைப் நு தான் இன்னிக்கு காலை வரை நினைச்சிட்டு இருந்தேன்..இன்னிக்குதான் தெரியும் காத்ரீனா கைப் மாதிரியே ஆச்சு அசலாக இருக்கும் இன்னொரு பெண் என்று.. ..
நல்ல வேலை இந்த பொண்ணு காத்ரீனா கைப் மாதிரி பிறந்திசசி.. இதுக்கு பதிலா பிரபாகரன் மாதிரி பிறந்திச்சின்னா... இந்நேரம் நம்ம ஆளுங்க இத பார்சல் பண்ணி ஸ்ரீலங்கா அனுப்பி இருப்பாங்க.. முட்டாள் சிங்கள அரசும்... இவரையும் கொன்னு.. இந்த உடம்ப உலகத்துக்கு காமிச்சி.. ரெண்டு பிரபாகரன கொன்னுட்டோம்னு மார் தட்டி இருப்பாங்க..
சல்மான் கானிடம் ஒரு கேள்வி.. ஐஸ்வர்யா ராய் மாதிரியே ஒரு பொண்ண கண்டுபிடிச்சீங்க.. இப்போ காத்ரீனா கைப் மாதிரி.. இந்த நேரத்த நல்ல கதைய கண்டுபிடிக்க செலவு பண்ணலாமே...
என்னடா இதுவரை படத்தோட கதைய பத்தி விமர்சனம் பண்ணலன்னு கேக்குறீங்களா..என்ன நக்கலா... அந்த கதைன்ற கருமம் இருக்கா இல்லையான்னு நான் யோசிக்கிறதுக்குள்ள..படத்த முடிச்சிட்டான்கன்ற கொலை வெறி இல இருக்கேன்.. நீங்க வேற..
கதை தெரியாம படம் பார்த்தாதான் ஒரு த்ரில் என்ற என் எண்ணத்துல கிலோ கணக்குல புல்டோசெர் அ விட்டு ஏத்திட்டாங்க..கொஞ்ச நாளா என் டைம் சரி இல்லைன்னு நினைக்கிறேன்.. இல்லைனா இந்த படத்த தியேட்டர் - ல பார்ப்பேனா..
சல்மான் என்ற உடனே நினைவுக்கு வருவது..ஆங்.. கண்டுபிடிசிருப்பீங்க.. இருந்தாலும் சொல்றேன்..சின்ன வயசு ல மேல் சட்டை இல்லாம கஷ்டப்பட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்.. அந்த பாதிப்பு இந்த படம் வரை இருக்கு..படம் முழுவதிலும் இருக்கு..
ஹீரோயின் காத்ரீனா கைப் நு தான் இன்னிக்கு காலை வரை நினைச்சிட்டு இருந்தேன்..இன்னிக்குதான் தெரியும் காத்ரீனா கைப் மாதிரியே ஆச்சு அசலாக இருக்கும் இன்னொரு பெண் என்று.. ..
நல்ல வேலை இந்த பொண்ணு காத்ரீனா கைப் மாதிரி பிறந்திசசி.. இதுக்கு பதிலா பிரபாகரன் மாதிரி பிறந்திச்சின்னா... இந்நேரம் நம்ம ஆளுங்க இத பார்சல் பண்ணி ஸ்ரீலங்கா அனுப்பி இருப்பாங்க.. முட்டாள் சிங்கள அரசும்... இவரையும் கொன்னு.. இந்த உடம்ப உலகத்துக்கு காமிச்சி.. ரெண்டு பிரபாகரன கொன்னுட்டோம்னு மார் தட்டி இருப்பாங்க..
சல்மான் கானிடம் ஒரு கேள்வி.. ஐஸ்வர்யா ராய் மாதிரியே ஒரு பொண்ண கண்டுபிடிச்சீங்க.. இப்போ காத்ரீனா கைப் மாதிரி.. இந்த நேரத்த நல்ல கதைய கண்டுபிடிக்க செலவு பண்ணலாமே...
என்னடா இதுவரை படத்தோட கதைய பத்தி விமர்சனம் பண்ணலன்னு கேக்குறீங்களா..என்ன நக்கலா... அந்த கதைன்ற கருமம் இருக்கா இல்லையான்னு நான் யோசிக்கிறதுக்குள்ள..படத்த முடிச்சிட்டான்கன்ற கொலை வெறி இல இருக்கேன்.. நீங்க வேற..
Subscribe to:
Posts (Atom)